<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439</id><updated>2011-11-28T06:32:32.752+05:30</updated><category term='க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்'/><category term='மொழியில்லாத் தருணங்கள்...'/><category term='இந்திய‌ கூட்ட‌ணி வெல்ல‌ முடியாத‌தா..?'/><category term='சிங்க‌ள‍‍‍'/><category term='நன்றி:தென்செய்தி'/><title type='text'>என‌து பார்வையில்...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>9</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-5515290665366540534</id><published>2009-08-15T20:33:00.001+05:30</published><updated>2009-08-15T20:33:41.492+05:30</updated><title type='text'>பெங்களூரு நாட்குறிப்புகள் ....!</title><content type='html'>பெங்களூரு நாட்குறிப்புகள் ....!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நீண்ட மழைக்காலம் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது .&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றனைப் போல ரகசியமாக வந்து செல்கிறது மழை.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பகலெனப் படுவது&lt;br /&gt;அலுவலகக் கணினிக்கான காலமாக இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இரவெனப்  படுவது வீட்டுக் கணினிக்கு உரியது &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தெருவானது ஒரு வாசலில் தொடங்கி&lt;br /&gt;இன்னொரு வாசலிலேயே முடிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வாழ்வெனப் படுவது சுழலும்&lt;br /&gt;ஓர் வெற்றுக் கனவு..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-5515290665366540534?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/5515290665366540534/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=5515290665366540534' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/5515290665366540534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/5515290665366540534'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2009/08/blog-post.html' title='பெங்களூரு நாட்குறிப்புகள் ....!'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-8956436399252924839</id><published>2009-03-21T14:06:00.001+05:30</published><updated>2009-03-21T14:08:11.990+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்க‌ள‍‍‍'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய‌ கூட்ட‌ணி வெல்ல‌ முடியாத‌தா..?'/><title type='text'>சிங்க‌ள‍‍‍,இந்திய‌ கூட்ட‌ணி வெல்ல‌ முடியாத‌தா..?</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;சிங்க‌ள‍‍‍,இந்திய‌ கூட்ட‌ணி வெல்ல‌ முடியாத‌தா..?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வ‌ல்லாதிக்க‌மும்,சிங்க‌ள‌ இன‌வெறி அர‌சும் இணைந்து ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளுக்கு எதிராக‌ போரிட்டு வெற்றி பெற்று வ‌ருவ‌தாக‌ ஒரு மாயையில் மூழ்கி கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ நீண்ட‌,கொடிய‌ போரில் புலிக‌ளை அழிக்க‌ கால‌க்கெடு வேறு&lt;br /&gt;&lt;br /&gt;நிர்ண‌யித்திருக்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ கூட்ட‌மைப்பிட‌ம் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் தோல்வி அடைந்து விட்ட‌தாக‌ வேல்த‌ர்மா எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமுட்டாள்க‌ளான‌ சிங்க‌ள‌வ‌னும் அத‌னனினும் முட்டாள்க‌ளான‌ இந்திய‌ அதிகார‌வ‌ர்க்க‌மும் இணைந்த‌ கூட்ட‌ணி முட்டாள்க‌ளின் சொர்க்க‌த்தில் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள் என்ப‌து ம‌ட்டும் நிராக‌ரிக்க‌வே முடியாத‌ உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ‌த்த‌மிழ் ச‌கோத‌ர‌ர்க‌ளே!! இந்த‌ முட்டாள் கூட்ட‌ணியிட‌ம் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் தோல்வி அடைய‌வும் இல்லை இது வெல்ல‌ப்ப‌ட‌ முடியாத‌தாக‌வும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ போரில் ஈழ‌த்த‌மிழ் ம‌க்க‌ளே முழுமையாக‌ ஈடுப‌டவில்லை.நீங்க‌ள் விடுத‌லைப் போரை முழுமையாக‌ ஆத‌ரித்து,போரையே சிந்தித்து ஓர்ம‌த்தோடு போரை ந‌ட‌த்தியிருந்தால் எப்பொழுதோ ஈழ‌த்தை அடைந்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக‌ யாழ்ப்பாண‌த்த‌மிழ‌னென்றும்,வ‌ன்னித்த‌மிழ‌னென்றும்,ம‌ட்ட‌க்க‌ள‌ப்புத் த‌மிழ‌னென்றும் பிள‌வுப‌ட்டும்,நாடு நாடாக‌ அக‌தியாக‌ த‌ப்பிச் சென்றும் உங்க‌ள‌து போரை நீங்க‌ளே ப‌ல‌வீன‌ப்ப‌டுத்தி விட்டீர்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;விய‌ட்னாம் போரின்போது அந்த‌ ம‌க்க‌ள் இப்ப‌டியா ஓடினார்க‌ள்..?என்ன‌தான் ர‌ஸ்யா சீன‌ ஆத‌ர‌வு இருந்தாலும் ம‌க்க‌ள் ஓர‌ணியில் நின்ற‌தால் தானே வெற்றிய‌டைந்தார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிடுத்து த‌லை இருக்கிற‌து என்ப‌த‌ற்காக‌வே த‌லைவ‌ர்க‌ளான‌ அத‌ற்கான‌ த‌குதிக‌ள‌ற்ற‌ க‌ருணாநிதிக‌ளிட‌மும் ஜெய‌ல‌லிதாக்க‌ளிட‌மும் ஆத‌ர‌வை எதிர்பார்ப்ப‌து முட்டாள்த‌ன‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் போரை உண‌ர்வு ரீதியாக‌ ம‌ட்டும் அணுகிவ‌ருவ‌தால் தான் இந்த‌ இழிநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் யூத‌ர்க‌ள் மாதிரி அறிவு வ‌ழிப்ப‌ட்ட‌ ச‌மூக‌மாக‌ இல்லாத‌தும் இந்த‌ பின்ன‌டைவுக்குக் கார‌ண‌ம்&lt;br /&gt;என்றே க‌ருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிக‌ள் ம‌ட்டுமே போரை ச‌மாளிப்பார்க‌ள் என்றாலும் இறுதி வெற்றிக்கு நீண்ட‌ கால‌ம் தேவைப்ப‌ட‌லாம்.கேண‌ல் ரூப‌ண் கூறிய‌து போல‌ போர‌டும் அள‌விற்கு ஆற்ற‌ல் கொண்ட‌ ஒரு அம்பாதாயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் இணைந்து தாக்குத‌ல் தொடுத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;போதும் இந்த‌ முட்டாள் கூட்ட‌ணியை ஈழ‌ ம‌க்க‌ளே வென்றெடுக்க‌ முடியும்.அது தான் ஈழ‌ம‌க்க‌ளின் த‌ன்மான‌மும் ஆகும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆக‌வே என‌த‌ருமை ஈழ‌த்த‌மிழ் உற‌வுக‌ளே...!&lt;br /&gt;&lt;br /&gt;அனைவ‌ரும் ஒர‌ணியில் நின்று போரையே சிந்தித்து,உண்டு உற‌ங்கி அத‌ற்காவே பிள்ளைக‌ள் அனைவ‌ரையும் ப‌யிற்சிய‌ளித்து ந‌ட‌த்துங்க‌ள்.அத‌ன் மூல‌ம் மிக‌ விரைவில் ஈழ‌மும் சாத்திய‌மாகும்.&lt;br /&gt;உங்க‌ளின் த‌ன்மான‌மும் காப்ப‌ற்ற‌ப்ப‌டும்.த‌மிழ் நாட்டில் இருந்து கொண்டு எங்க‌ளால் ப‌திவுக‌ளும் க‌விதையும் ம‌ட்டுமே எழுத‌ முடியும்.போர‌ட்ட‌த்தின் வெற்றியை நீங்க‌ள்தான் தீர்மாணிக்க‌ முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;தொட‌ர்ந்து பேசுவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;த‌மிழ‌ர்க‌ளின் தாக‌ம் அக‌ண்ட‌ த‌மிழ‌க‌ தாய‌க‌ம்..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-8956436399252924839?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/8956436399252924839/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=8956436399252924839' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/8956436399252924839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/8956436399252924839'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2009/03/blog-post.html' title='சிங்க‌ள‍‍‍,இந்திய‌ கூட்ட‌ணி வெல்ல‌ முடியாத‌தா..?'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-3142645849394361842</id><published>2009-02-26T00:16:00.002+05:30</published><updated>2009-02-26T00:31:07.170+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்'/><title type='text'>க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்..</title><content type='html'>க‌ட‌ல்க‌ளைத் தாண்டி கேட்கிற‌து&lt;br /&gt;&lt;br /&gt;வீறிட்ட‌ சிசுக்குர‌ல்,&lt;br /&gt;&lt;br /&gt;காப்புடைந்த‌ பெண்ணின் க‌த‌ற‌ல்,&lt;br /&gt;&lt;br /&gt;க‌ன‌ன்றெரியும் வீட்டின் குமுற‌ல்,&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ம‌ர‌ச‌ப் பேச்சின் அல‌ங்கார‌ வ‌ளைவுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;எதிரெதிர் இன‌த்து ம‌க‌னும் ம‌க‌ளும்&lt;br /&gt;&lt;br /&gt;முகூர்த்த‌ வேளையில்&lt;br /&gt;&lt;br /&gt;சிர‌ச‌றுப‌ட்டு அல‌றிவிழும் ர‌ண‌க‌ள‌ம்&lt;br /&gt;&lt;br /&gt;இன‌ம் மொழி ம‌த‌ம் என்று&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வ‌ல‌ம் எடுத்த‌&lt;br /&gt;&lt;br /&gt;மூளையின் தாதுக்க‌ள் மோதி&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ங்க‌ம‌ம் பிற‌ழ்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கெடுத்த‌து ஒரு முடிச்சு&lt;br /&gt;&lt;br /&gt;முடிச்சு இனி&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டிக்கும் முந்தானைக்கும‌ல்ல‌,&lt;br /&gt;&lt;br /&gt;முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியின் அனுஷ்டான‌ங்க‌ளும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆர‌வார‌ம் ஒடுங்கி ஸ்த‌ம்பித்த‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ல்லும் உருகி&lt;br /&gt;&lt;br /&gt;அலையெடுக்கிற‌து&lt;br /&gt;&lt;br /&gt;எரிம‌லைப் பிழ‌ம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ரண‌ம் ம‌ட்டுமே என்றான‌ பின்&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ர‌ண‌ம் தான் என்ன‌..?&lt;br /&gt;&lt;br /&gt;‍‍‍-----பிர‌மிள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-3142645849394361842?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/3142645849394361842/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=3142645849394361842' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/3142645849394361842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/3142645849394361842'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2009/02/blog-post_26.html' title='க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்..'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-8406614745495996806</id><published>2009-02-18T23:00:00.000+05:30</published><updated>2009-02-18T23:01:22.964+05:30</updated><title type='text'>வ‌ன்னிப் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்ன‌ர் இல‌க்கிய‌த்துக்கான‌ சாத்திய‌ம் இருக்கிற‌தா..?</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;வ‌ன்னிப் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்ன‌ர் இல‌க்கிய‌த்துக்கான‌ சாத்திய‌ம் இருக்கிற‌தா..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது வ‌ன்னியில் ந‌டைபெறும் இன‌ப்ப‌டுகொலையான‌து ஜெர்ம‌னியின் ஆஷ்விட்சுக்கு இணையான‌ ஒரு நிக‌ழ்வாக‌வே தோன்றுகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;நாள‌ந்த‌ம் இணைய‌த்த‌ள‌ங்க‌ளின் வாயிலாக‌ செய்திக‌ளைக் க‌ண்டு குற்ற‌ உண‌ர்வுக‌ளால் மூழ்க‌டிக்க‌ப்ப‌டுகிறோம்.இந்த‌ குற்ற‌ உண‌ர்வின் எல்லையாக‌ த‌ற்கொலைக‌ள் இருக்கின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விவ‌ரிக்க‌ வார்த்தைக‌ளோ,க‌விதையோ வேறு எந்த‌ இல‌க்கிய‌ வ‌டிவ‌மோ ஏன் மொழியே கூட‌ ச‌க்திய‌ற்றுப்போய் விடுகிற‌தாக‌வே உண‌ருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பேர‌ழிவு இல‌க்கிய‌ம்(Holocaust literature) என்ற‌ வ‌கையில் ஆஷ்விட்சில் சிக்கிய‌ யூத‌ர்க‌ளால் ப‌டைக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌.அவ‌ர்க‌ளாவ‌து இர‌ண்டாவ‌து உல‌க‌ப்போரின் முடிவில் விடுவிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் ஆனால் வ‌ன்னி த‌மிழ‌ர்க‌ளுக்கு விடுத‌லை என்ற‌ ஒன்று சாத்திய‌மா என்ற‌ அச்ச‌ம் ம‌ன‌தில் ப‌ர‌வுகிற‌து&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப‌டியான‌ சாத்திய‌த்துக்கு முன்பே அங்கே யாரேனும் உயிரோடு மிஞ்சுவார்க‌ளோ என்ப‌தே ச‌ந்தேக‌ம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ன்னியில் இற‌ப்ப‌து ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌ ம‌னித‌ன் என்ற‌ க‌ருத்தாக்க‌மும் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-8406614745495996806?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/8406614745495996806/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=8406614745495996806' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/8406614745495996806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/8406614745495996806'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2009/02/blog-post_18.html' title='வ‌ன்னிப் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்ன‌ர் இல‌க்கிய‌த்துக்கான‌ சாத்திய‌ம் இருக்கிற‌தா..?'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-1819733357194936399</id><published>2009-02-15T18:56:00.002+05:30</published><updated>2009-02-15T19:54:31.367+05:30</updated><title type='text'>க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);font-size:100%;" &gt;க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..!&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;த‌மிழ‌ர் ப‌ல‌ரும் கொண்டிருக்கிற‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளில் ஒன்றான‌ "த‌மிழினத் த‌லைவ‌ர்" க‌லைஞ‌ர் ஓரு முடிவு எடுப்பார் ஈழ‌த்தில் செத்து ம‌டிகின்ற‌ ந‌ம‌து ச‌கோத‌ர‌ர்க‌ளை காப்பாற்றுவார் என்ற‌ மூட‌ ந‌ம்பிக்கை தான் மிக‌ மோச‌மான‌து.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ருணாநிதிக்கு த‌மிழின‌த் த‌லைவ‌ர் ப‌ட்ட‌த்தை யாருமே கொடுக்க‌வில்லை த‌ன‌க்குத் தானே சூடிக் கொண்ட‌ ப‌ட்ட‌ம் தான் அது ஏனென்றால் "ப‌ட்ட‌ங்க‌ள்" சூடிக்கொள்வ‌தில் அவ‌ருக்கு நிக‌ர் அவ‌ர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிர‌பாக‌ர‌ன் ஜ‌ன‌நாய‌க‌வாதி இல்லை அவ‌ர் ஒரு ச‌ர்வாதிகாரி என்கிறார் ச‌ரி ஜ‌ன‌நாய‌க‌வாதி க‌ருணாநிதியின் ஜ‌ன‌நாய‌க‌ப் ப‌ண்புக‌ளை கொஞ்ச‌ம் ஆராய்வோம்..&lt;br /&gt;&lt;br /&gt;1.அறிஞ‌ர் அண்ணாவிற்கு பின் த‌லைவ‌ராக வ‌ந்திருக்க‌ வேண்டிய‌ நெடுஞ்செழிய‌னுக்கு குழி ப‌றித்து சினிமாகார‌ரான‌ எம்.ஜி.ஆருட‌ன் இணைந்து துரோக‌ம் செய்து த‌லைவராக‌ ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;2.பின்ன‌ர் தான் த‌லைவ‌ராக‌ வ‌ர‌ உத‌விய‌ எம்.ஜி.ஆர் க‌ண‌க்கு கேட்ட‌தால் அவ‌ரை வெளியேற்றி த‌ன‌து ஜ‌ன‌நாய‌க‌ ப‌ண்பை இரண்டாவ‌தாக‌ நிரூபித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;3.மிசா கொடுமைக‌ளை அர‌ங்கேற்றிய‌ "ஜ‌ன‌நாய‌க‌வாதி" இந்திராவுட‌ன் கூட்ட‌ணி அமைத்து மீண்டும் நிரூபித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;4.எந்த‌ த‌குதியும் இல்லாத‌ த‌ன‌து ம‌க‌னுக்கு ப‌த‌வி கொடுத்தும்,எங்கே தன‌து ம‌க‌னின் ம‌குடாபிச‌த்துக்கு போட்டியாக‌ வ‌ந்துவிடுவாரோ என்று வைகோவை வெளியேற்றியும் நிரூபித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;5.பின்ன‌ர் அழ‌கிரி,த‌யாநிதி,க‌னிமொழி,க‌ய‌ல்விழி என்று த‌ன‌து மொத்த‌ குடும்ப‌த்தையும் க‌ள‌த்தில் இற‌க்கி த‌மிழ்நாட்டையே கூறு போட்டு முழுமையான‌ ஜ‌ன‌நாய‌க‌வாதியாக‌ ப‌ரிண‌மித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழ‌ம்,காவிரி,முல்லை பெரியாறு என்று வ‌ர‌லாற்றின் வ‌ழி நெடுகிலும் இவ‌ருடைய அல‌ட்சிய‌மும், துரோக‌மும் தொட‌ர்ந்து கொண்டிருகிற‌து.&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ம‌து "ஜ‌ன‌நாய‌க‌ அமைப்பே" முட்டாள்த‌ன‌மான‌ ஒன்று என்ப‌தும் அது முதிர்ச்சிய‌ற்ற‌ ந‌ம‌து ம‌க்க‌ளுக்கு முற்றிலும் பொருந்தாது என்ப‌துக்கு சாலைகளின் நடுவே அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சுவ‌ர்க‌ளே சாட்சி ஏனென்றால் வெண்கோடுக‌ளால் எல்லை தாண்டும் வாக‌ன‌ங்க‌ளை த‌டுக்க‌ முடியாது என்ப‌தால்தானே..?&lt;br /&gt;&lt;br /&gt;க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே தி.மு.க‌ வில் நீங்க‌ள் உருவாக்கிய‌ "ஜ‌ன‌நாய‌க‌ம்" சூட‌மேந்திக‌ளையும்,அடிவ‌ருடிக‌ளையும்,துதிபாடிக‌ளையும் உருவாக்கிய‌து தான்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌ருணாநிதிக்க‌ள்,ஜெய‌ல‌லிதாக்க‌ளை(பாசிச‌) உருவாக்கிய‌துதான் ந‌ம‌து "ஜ‌ன‌நாய‌க‌த்தின்" விப‌த்து(சாத‌னை??).&lt;br /&gt;&lt;br /&gt;(க‌ட‌ந்த‌ ப‌ல‌ தேர்த‌ல்க‌ளில் நான் தி.மு.க‌ விற்கே வாக்க‌ளித்தேன் குறைந்த‌ தீமை என்ற‌ அடிப்ப‌டையில்)&lt;br /&gt;இறுதியாக‌ ஒரு உறுதியான‌,தீவிர‌மான‌ நிலையெடுத்து போர‌ட்ட‌த்தை ஆத‌ரிக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அத‌ன் மூல‌மாவ‌து துரோக‌த்தின் வீச்சாவ‌து கொஞ்ச‌ம் குறையும் இல்லையெனில் நீரோ ம‌ன்ன‌னின் வ‌ரிசையில் சேர்க்க‌ப்ப‌டும் நாள் வெகு தொலைவில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு முறை என‌து த‌லைப்பை வாசிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;"க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..!"&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-1819733357194936399?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/1819733357194936399/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=1819733357194936399' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/1819733357194936399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/1819733357194936399'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2009/02/blog-post_15.html' title='க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-4491244659435734872</id><published>2009-02-08T18:10:00.000+05:30</published><updated>2009-02-08T18:13:35.307+05:30</updated><title type='text'>ஒரு (இலங்கை) ராணுவ வீரனின் தொழில் அறம்...!</title><content type='html'>நீ மனிதனல்ல ராணுவ வீரன்&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சியளிக்கப் பட்ட மிருகம்..&lt;br /&gt;&lt;br /&gt;உனது நினைவில் இருக்க வேண்டியது &lt;br /&gt;&lt;br /&gt;உன் பெயர் கூட அல்ல உனது அடையாள எண் மட்டுமே..&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி கேட்காமல் மேலதிகாரிக்கு கீழ்படிந்து நட..!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விசில் சத்தம் அல்லது உத்தரவு வந்தவுடன் சுடு..&lt;br /&gt;&lt;br /&gt;தாய்,தந்தை,குழ்ந்தை எதுவாயினும் சுடு&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும் தரை மட்டமாக்கு&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை தலைகளை கொய்தாய் என்பதை பொறுத்து&lt;br /&gt;&lt;br /&gt;உனது தகுதி தீர்மானிக்கப்படும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-4491244659435734872?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/4491244659435734872/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=4491244659435734872' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/4491244659435734872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/4491244659435734872'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2009/02/blog-post.html' title='ஒரு (இலங்கை) ராணுவ வீரனின் தொழில் அறம்...!'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-838107953024920171</id><published>2009-01-01T14:33:00.000+05:30</published><updated>2009-01-01T14:37:54.574+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நன்றி:தென்செய்தி'/><title type='text'>கர்நாடக தமிழர்களும் தமிழ்நாட்டுக் கன்னடர்களும்</title><content type='html'>நன்றி:தென்செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக தமிழர்களும் தமிழ்நாட்டுக் கன்னடர்களும்&lt;br /&gt;- திரு. அழகிரிசாமி துணைத் தலைவர், கருநாடகத் தமிழர் பேரவை, ஒசபேட்டை&lt;br /&gt; &lt;br /&gt;16-08-08 சனிக்கிழமை, மதுரை மாநகரில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு முடிந்தவுடன் ஞாயிறு மதியம் எனது பயணத்தைத் தமிழ்நாட்டின், கன்னடர்களைத் தேடித் தொடர்ந்தேன். முதலில் தேனி மாவட்டத்தைத் தேடிப் பயணித்தேன். மாவட்டத்தின் இரண்டாம் பெரிய நகரமான கம்பத்தில் எனது தேடுதலைத் தொடர்ந்தேன். ஒரு பால்காரரின் துணையை நாடி அங்குள்ள தேவர் பேரவையின் தலைவர் குமரேசன் அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன். நண்பர் மிக அன்பாகவும் பண்பாகவும் நமது நோக்கத்தைப் புரிந்து கொண்டதுடன், அதற்காக அனைத்து உதவிகளையும் செய்வது தமது கடமை என்று கூறி உடனே நமக்கு வேண்டியவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இராமகிருஷ்ணன் என்ற ஒக்கலிகரான பொறியாளர் (இன்ஜினியர்) அவர்களை அங்கேயே அழைத்து, நம்மை அவருக்கு அறிமுகம் செய்து நமது பயணத்தின் நோக்கத்தை யும் கூறி, இங்கிருக்கும் அனைத்துக் கன்னட மொழி பேசும் ஒக்கலிக சமுதாய மக்களை அறிமுகம் செய்து "இவரும், நீங்களும் சேர்ந்து கலந்துரையாடுங்கள்" என்று இருவரையும் சேர்த்து அனுப்பி வைத்தார். இராமகிருஷ்ணன் அவர்களும் நானும் சேர்ந்து ஒக்கலிக தலைவரான ஜெ. தத்தராஜ் அவர்களை அவரது வீட்டில் சந்தித்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பேர்களும் சேர்ந்த அந்தக் கூட்டத்தில் கர்நாடகத் தமிழர்களுக்கு, கன்னட ஒக்கலிக சமுதாயத்தையும் கர்நாடகத்தையும் காப்பதற்காகவே தான் அவதாரம் எடுத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ரட்சணா வேதிக்கைகள் குறித்துச் சுருக்கமாக எடுத்துக் கூறினேன். அத்துடன் "இப்பிரச்சினை களை இதுவரைக்கும் கர்நாடகத் தமிழர்களான நாங்கள் மட்டுமே எதிர்கொண்டோம். இதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் விலையும் அடைந் திருக்கும் அவமானங்களும் இழப்பும், பொருட்சேதமும் ஈடுகட்ட முடியாதது. இன்னொரு தலைமுறை கடந்தும் இந்த வடுக்களும் வருத்தங்களும் நீடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக ஒக்கலிக சமுதாயத் தீவிரவாதிகளால் நாங்கள் அடைந் திருக்கும் இந்த நிலை எந்தப் பாவமும் அறியாத உங்களையும் வந்தடையக் கூடாது என்ற நல்ல நோக்கத்திற்காகவே நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். அறிவற்றவர்களின் இந்தச் செயலால் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படும் போது எங்களுக்காக, எங்கள் இனம், மொழி, சுற்றம், நண்பர் என்று எங்கள் சொந்த மாநில மக்கள் வெடித்துக் குமுறும்போது, மாநில அரசோ, காவல் துறையோ, துணை இராணுவமோ எதுவுமே ஒன்றும் செய்யமுடியாது. அதன்பிறகு நாடு என்ற எண்ணம் மறைந்து, மாநிலமே நாடு என்ற நிலை உருவாகிவிடும். இப்படித்தான் பெருவாரியான நாடுகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. நாம் இந்த நிலைக்கு செல்லாமல் இருக்க இதைப்போன்ற இயக்கங்களை எதிர்த்துத்தான் வாழவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக ரக்சணா வேதிக்கேவுக்கு இந்தத் தமிழர் விரோத எண்ணம் ஏன் வந்தது? கர்நாடகத்தில் தமிழர்கள், அதுவும் குறிப்பாகத் தலைநகரத்தில் நிறைந்து வாழ்கின்றனர். ஆனால் கன்னட மக்கள் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்றே அவர்கள் மற்ற கன்னடர்களுக்கு அறிக்கைகளாலும் மூளைச் சலவை செய்தும் முட்டாள் களாக்கிக் கருநாடகத்திற்கு பெரும்கேட் டையும் பின்னடைவையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்."’என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ நாங்கள் அதாவது கன்னடமொழி பேசும் ஒக்கலிக சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய முப்பது இலட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். தமிழ் மண்ணிலே... அதுவும் எப்படி... மிகச் சிறந்த கல்வி, தொழில், அரசாங்க வேலை, பெரும் செல்வந்த வர்கள், எஸ்டேட் அதிபர்கள், ஊரின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்படி எல்லாத் துறைகளிலும் கன்னடர் என்ற பாகுபாடு சற்றும் இன்றித் தமிழர்களை விட அதிக சலுகைகளைப் பெற்றுச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்த உண்மை, தலைவர் திரு. தேவகவுடா அவர்களுக் கும் ஆதி கஞ்சனகிரி மடாதிபதி அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்’என்றனர் அந்த அன்பர்கள். ஆனால் அவர்கள் ஏன் இதை வெளிப் படுத்தவில்லை? கன்னட வெறியர் களுக்கு ஏன் இதைக் கூறி, "உங்கள் வெறியாட்டம் நம் கன்னட ஒக்கலி சமுதாய மக்களின் அருமையான, வளமான வாழ்க்கையைப் பறித்திடும்" என்று ஏன் கூறவில்லை என்பன போன்ற உண்மைகளை ஒளிவு மறைவின்றி விவாதித்தோம் &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் இராமகிருஷ்ணன், "இதற் கெல்லாம் காரணம், கன்னட ரக்சண வேதிகையைச் சேர்ந்தவர்கள் எதுவுமே தெரியாதவர்கள்; எதையோ மனதில் வைத்துக்கொண்டு, சொந்த இலாபத் துக்காக எதையோ செய்கின்றனர். இதன் கேடு, இரண்டு சமுதாய மக்களை எப்படி செயல் இழக்கச் செய்யும்; பிறகு அதன் விளைவுகளில் இருந்து மீள்வது எப்படி என்ற எந்த சிந்தனையும் அற்றவர்கள். நீங்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் இரண்டு மொழி பேசும் மக்களையும் கைகோர்க்க வைத்து- கெடுமதி செய்யும் இயக்கங்களின் தவறு களை எப்படி இருமாநில மக்களுக்கும் சுட்டிக்காட்டி புரியவைப்பது? இதை நாம் இருமொழி பேசும் மக்கள் விவாதித்து உதவி தேவை என்றால் திரு. தேவே கவுடா அவர்களையும், மடாதிபதிய வர்களையும் இதில் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்து கொள்வோம்"’என்று அவர் கூறிய கருத்தை நானும் நண்பர் தத்தராஜ் அவர்களும் ஏற்றுக் கொண்டோம். அத்துடன் தத்தராஜ் அவர்கள் - "நமக்குள் வேறுபாடு என்பதே இல்லை; ஏன் என்றால் நாங்களும் (ஒக்கலிகர்) நீங்களும் ஒரே மொழி இன மக்கள் என்பதே சரித்திரச் சான்று. என்னிடம் சில சரித்திரச் சான்று கள் இருக்கின்றன. இன்னும் சிலவற்றைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.’’&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு மைசூர் என்பது முன்பு "எருமையூர்" என்றுதான் இருந்திருக்கின்றது" என்றார். "ஆம் அய்யா அத்துடன் எருமையூரை ஆண்ட அரசன் பெயரும் பிட்டன் கொற்றன் என்பதே ஆகும்."’என்றேன். "வடமொழியில் எருமைக்கு "மகிஷி"’என்று அவர்கள் மொழி சொல்வதால் அதை மகிஷாசூர் என்றும் அரசன் பிட்டன் கொற்றன் என்பதை விஷ்ணுவர்தன் (பிட்டுக்கு மண் சுமந்த பெருமாள்) என்றும் மொழி மாற்றம் செய்து தமிழ்ப் பெயர் உள்ள ஊரையும், தமிழ்ப் பெயர் உள்ள அரசனையும் சமஸ்கிருத ஊர், சமஸ்கிருத அரசனாக மாற்றி ஊரும் அரசனும் தமிழர்கள் அல்லர் என்று ஆரிய மாயை செய்து மக்களை ஏமாற்றினர்."’என்ற உண்மையை நான் எடுத்துக் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் தத்தராஜ் அவர்கள், "ஆமாம் இதுதான் உண்மை. இதைப் போன்ற இன்னும் எத்தனையோ சரித்திரச் சான்றுகள் உள்ளன. அவை களைத்தான் நானும் ஒவ்வொன்றாகக் கிடைப்பதை எல்லாம் சேகரிக்கின்றேன். தமிழர்களும் கன்னடர்களும் மொழி மற்றும் பண்பாடு, ஆட்சி என்று அனைத்திலும் ஒரே இனம்தான். இன்று சில குள்ள நரிகளால் நமது அறியாமை யால் நாம் சற்று வேறுபட்டிருக்கலாம். இன்றைக்கும் தமிழர்களும் கன்னடர் களும் உணவு உடை பண்பாடு - மொழி கூட ஊன்றிக் கவனித்தால் சற்று மட்டுமே வேறுபட்டிருக் கின்றனர்.’ஆகவே ஒரு சிறு கூட்டம் அவர்கள் பிழைப்பிற்காக இன ஒற்றுமையைக் குலைத்து நம்மை மிகப்பெரிய இழப்பிற்கு இட்டுச் செல்வதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. அதற்காக கன்னட மொழி பேசும் ஒக்க&lt;br /&gt;&lt;br /&gt;லிக சமுதாய மக்களை இங்கு (கம்பம்) வரவழைக்கிறோம். நீங்களும் வாருங்கள். ஒரு தீர்மானம் போட்டு அதைத் தொலைக்காட்சி, நாளிதழ் போன்ற ஊடகங்களின் மூலம் நாட்டிற்கே விளம்பரப்படுத்துவோம். கையேட்டுப் படிவங்களாகவும் அச்சடித்துக் கர்நாடகக் கன்னடர்களுக்கு விநியோகிக்கலாம். நீங்கள் அங்கேயும் (கர்நாடகத்தில்) நாங்கள் இங்கேயும் (தமிழகத்தில்) நண்பர் களாகவும் ஒரே இனம் என்ற எண்ணம் உள்ளவர்களாகவும் வாழ்வதற்கு என்ன தீர்வோ அதை நாம் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து அதை எப்படி யெல்லாம் செயல்படுத்த வேண்டுமோ அப்படியே செயல்படுத்துவோம். உங்கள் கர்நாடகத் தலைவர்களுடன் பேசி எங்களுக்குத் தெரியப்படுத்துங் கள்"’என்று கூறி விடை கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை காமய கவுண்டன்பட்டி (கே.கே. பட்டி) ஊரில் நாட்டாமையாக இருக்கும் "கிருஷ்ணகுமார்" என்ற பெரியவரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். அவருடைய இரண்டு மகன்கள் மற்றும் அதே ஒக்கலிக இனத்தைச் சேர்ந்த மற்றொருவரும் உடன் இருந்தனர். என்னைப் பற்றிய அதிக விசாரிப்பின்றி நோக்கம் என்னவென்று கேட்டார். நானும் சுருக்கமாக கர்நாடகத்தில் தமிழர்கள் நிலை, ஏற்பட்ட இழப்புகள், மேலும் நடந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தல்கள், எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்ற ஊகங்கள் போன்றவற்றைச் சுருக்கமாக விவரித்தேன். பெரியவரும் அமைதியாகக் கேட்டார். பிறகு, “இதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்" என்று கேட்டார். நானும் விவரமாக, "அய்யா, இன்றுவரை நடந்தது எல்லாம் கர்நாடகத் தமிழர்களுக்கு மிகப்பெரிய கொடுமை... இந்தக் கொடுமையை நடத்தும் கர்நாடக ரக்சணா வேதிகேயின் தலைவர் மற்றும் பெருவாரியான தொண்டர்களும் உங்கள் சொந்த இனமான ஒக்கலிக இனத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் வாதமே, உங்கள் ஒக்கலிகர் கர்நாடகத்தை விட்டு வேறெங்கும் இல்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் கன்னடர்களே இல்லை. "நீங்கள் மட்டும் ஏன் இங்கு இருக்கின்றீர்கள்? உங்களை அடித்துத் துரத்தினாலே கர்நாடகத்தைக் காப்பாற்றி விட்டதாகத்தான் பொருள்" என்கின்ற அறிவற்ற வாதத்தைக் கொண்டுள்ளனர். கன்னடர்கள் தமிழ்நாட்டில் எவ்விதப் பாகுபாடின்றி இந்த மண்ணின் சொந்த மைந்தர்களாக நல்ல வசதியோடும், வாய்ப்போடும், அரசாங்கப் பணியிலும், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட கன்னடர்களிலும் குறிப்பாக ஒக்கலிக இன கவுடர்கள்தான் 80 விழுக்காட்டை சேர்ந்தவர்கள். மிகப்பெரிய செல்வந்தர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், எல்லாம் கூட இந்தப் பகுதியில் ஒக்கலிக இனக்கன்னடர்களே என்ற உண்மைகள் எல்லாம், அந்த இனவெறி, மொழிவெறி, குறுக்குவழியில் பணம், செல்வாக்கு அடைவதில் குறியாக இருக்கும் வெறிபிடித்த உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒக்கலிக நாராயண கவுடாவின் காதிலும் மனதிலும் படவேண்டும் என்றால் அதை நீங்கள் செய்வதுதான் சரியாக இருக்கும். அதற்குச் சரியான காலமும் இதுதான்"’என்று கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகேனக்கல் விவகாரத்தில், இதுவரைக்கும் கர்நாடகத் தமிழர்களைத் திரும்பிப் பார்க்காத தமிழ்நாட்டு இயக்கங்கள் இனியும் வேடிக்கை பார்ப்பது தங்களின் மிகப்பெரிய தவறு என்று செயற்படத் தொடங்கியிருப்பது தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுவே இத்துடன் நின்றுவிடுவதுதான் இரு மாநில மக்களுக்கும் நல்லது. தொடர்ந்தால் இரு மாநில மக்களும் மிகப்பெரும் விலையைக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அது நாட்டின் பிரிவினைக்கே வழி வகுக்கும். ஆகையால் நான் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். உங்களைச் சந்தித்தது, பேசியது அனைத்தையும் எங்கள் கர்நாடகத் தலைவர், மற்றும் தமிழக தலைவர்களில் ஒருவரான மணி அண்ணாருக்கும் தெரிவிக்கிறேன்.அவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்"’என்றேன். அனைத்தையும் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர், "இதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்"?’என்று நினைக்கிறீர்கள் என்று மட்டும் கேட்டார். நானும் தத்தராஜ் அவர்களும் எடுத்திருக்கும் முடிவைக்கூறி, ஒரு நல்ல நாளில் நீங்களும் நாங்களும் இங்கேயே ஒன்று சேர்ந்து விவாதிப்போம். அதில் அனைவராலும் எடுக்கப்படும் முடிவுப்படி செயல்படுவோம்". என்றேன். "மிகப்பொருத்தமானது, காலம் கடத்தாமல் விரைந்து செயல்படலாம். சந்திப்பதற்கு எப்போது ஏற்பாடு செய்வது என்பதை நீங்கள் தெரியப்படுத்துங்கள்"’என்று கூறி விடை கொடுத்தார் பெரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சுற்று வட்டாரத்தில் ஒக்கலிக இன மக்கள் மிகப்பெரும் நிலக்கிழார்களாகவும் தொழில் அதிபர்களாகவும் பெரும்தென்னை மற்றும் பாக்குத் தோப்புக்களின் உரிமையாளர்களாகவும் தொழில் அதிபர்களாகவும் நகரத்தின் சுற்றுவட்டாரமான பேரூர், தொண்டாமுத்தூர், தாலியூர், வடவள்ளி, மருதமலை, திப்பனூர், பன்னிமடை கணுவாய், தடாகம் போன்று இன்னும் நிறைய ஊர்களில் கன்னடம் பேசும் ஒக்கலிக மக்கள் வாழ்ந்து வாழ்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் வாழுகின்ற கன்னடர்களின் மிகப்பெரிய சமுதாயம் ஒக்கலிக கவுடர் சமுதாயமே. கன்னட மக்கள் தொகையில் 75 விழுக்காடு ஒக்கலிக கவுடர்களே. 25 விழுக்காடு மட்டும் மற்ற சமுதாயக் கன்னடர்கள். இந்த உண்மை தெரியும் போது நாராயணகவுடருக்கு உறைக்கும் என்று நினைக்கிறேன். இவர்கள் மிகச்சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, தேனி மாவட்டத்தில் பசுமைப் பகுதி 80 விழுக்காடு கவுடர்களின் கையில். மீதி மட்டும் தமிழர்கள், குறிப்பாகத் தேவர்களுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் இருக்கும் பெரியாறு அணையின் தண்ணீரை முழுக்க தேனி மாவட்டமே உபயோகிக்கிறது. அதில் கவுடர்களின் பங்கு 80 விழுக்காடு. தண்ணீருக்காகக் கேரளாவுடன் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களும் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தின் வெற்றியில் 80 விழுக்காடு கன்னட கவுடர்களுக்கு. கோவையில் மேற்கு மலையின் அடிவாரத்தில் இருக்கும் பசுமையான தோட்டங்களும் நொய்யல் ஆற்றின் மேல்பகுதி முழுமையும் கோவை கணுவாயில் இருந்து தடாகம் வழியில் ‘கேரள’ எல்லை வரைக்கும் உள்ள பசுமைப் பகுதியில் 65 விழுக்காடு கன்னட கவுடர்களுடையதே. கோவை நகரம், அதன் சுற்றுப் பகுதிகளில் பெரியதும் சிறியதுமாகத் தொழிற்சாலைகளும் கவுடர்களுக்கு உண்டு. மேட்டூரில் இருந்து வேலூர் வரைக்கும் கன்னடர்கள் விவசாயம், தொழில் என்றும் மிக சிறப்பாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகத்தில், தமிழர்கள் மீது எத்தனை வன்கொடுமைகள் நடந்தாலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் கன்னடக்காரர்கள் என்று இன்று வரைக்கும் பிரித்துப் பார்த்து அவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்கவில்லை. "கர்நாடகத் தமிழர்களுக்கு எத்துணைக் கொடுமைகள் நடந்தாலும் தமிழ்நாட்டில் எவ்விதமான எதிர்விளைவுகளும் இல்லையென்றால் அங்குக் கன்னடர்கள் இல்லையென்றுதானே பொருள்". - இதுதான் கன்னடர்களின் வாதம். ஒன்று, கன்னடர்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது தமிழர்கள் அங்கு உணர்வுகளை எல்லாம் விற்று தம் தேவைகளை மட்டும் நிறைவு செய்து கொண்டிருக்கலாம். கர்நாடகத்தில் கொள்ளிக்கட்டைகளுடன் திரியும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருவதால் மிக வேகமாக இரு சமுதாய தலைவர்களும் சேர்ந்து ஒரு&lt;br /&gt;&lt;br /&gt;சரியான நடைமுறையையும் ஊடகங்கள் மூலம் பிரச்சாரத்தையும் ஒழுங்கு&lt;br /&gt;&lt;br /&gt;படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-838107953024920171?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/838107953024920171/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=838107953024920171' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/838107953024920171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/838107953024920171'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2009/01/blog-post.html' title='கர்நாடக தமிழர்களும் தமிழ்நாட்டுக் கன்னடர்களும்'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-5514836099087974772</id><published>2008-06-24T13:49:00.000+05:30</published><updated>2008-06-24T13:50:01.004+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழியில்லாத் தருணங்கள்...'/><title type='text'>மொழியில்லாத் தருணங்கள்...</title><content type='html'>மொழியில்லாத் தருணங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்&lt;br /&gt;இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்&lt;br /&gt;&lt;br /&gt;வெகுநாட்கள் கழித்து வீடு திரும்புகையில்&lt;br /&gt;கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்&lt;br /&gt;&lt;br /&gt;தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற&lt;br /&gt;வாடிய மல்லிகைப்பூக்களில்&lt;br /&gt;&lt;br /&gt;தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்&lt;br /&gt;வழிகின்ற கண்ணீர்த்துளியில்&lt;br /&gt;&lt;br /&gt;புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்&lt;br /&gt;துணையின் மூச்சுக்காற்றில்&lt;br /&gt;&lt;br /&gt;மொழியில்லாத் தருணங்களிலும்&lt;br /&gt;பிறக்கத்தான் செய்கின்றன&lt;br /&gt;கவிதைகள்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி--நிலாரசிகன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-5514836099087974772?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/5514836099087974772/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=5514836099087974772' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/5514836099087974772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/5514836099087974772'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2008/06/blog-post.html' title='மொழியில்லாத் தருணங்கள்...'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8996292360605018439.post-1672465795016487723</id><published>2008-03-02T14:28:00.000+05:30</published><updated>2008-03-02T22:18:40.774+05:30</updated><title type='text'>கம்யூனிசமும் மலையாளிகளும் -ஒரு மலையாளியின் பார்வையில்</title><content type='html'>நன்றி:காலச்சுவடு&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:பால் சக்கரியா -மலையாள எழுத்தாளர்&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளிகளுக்குக் கம்யூனிசத்துடன் உள்ளது போலத் தமிழர்களுக்கு எந்தக் கருத்துக் கோட்பாட்டுடன் உறவுள்ளது என்று நான் பல சமயங்களிலும் யோசித்ததுண்டு. ஒருவேளை திராவிட இயக்கத்துடனிருக்கலாம். மரபார்ந்த சமூகங்கள் நவீனத்துவத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்ளத் தொடங்குவது கருத்துச் சார்ந்த மாற்றங்களின் பாதிப்பு உண்டாகும்போதுதான். மலையாளிகளிடையே இது போன்ற மாற்றம் படிப்படியாகத்தான் உருவானது. மிஷனரிகள் பொதுக் கல்வியைச் சாத்தியப்படுத்தின. ஸ்ரீ நாராயணன் சாதியையும் மதத்தையும் கேள்விக்குட்படுத்தினார். அச்சு மற்றும் காகிதத்தின் வருகை அறிவையும் கலாச்சாரத்தையும் வெகுசனத் தன்மை கொண்டதாக்கியது.இவை அனைத்தின் தொடர்ச்சியாகவே கம்யூனிசம் ஒரு சீர்திருத்த அரசியல் இயக்கமாகக் கேரளத்தில் வேரூன்றியது. ஒரே சமயத்தில் அது அரசியல் இயக்கமாகவும் கலாச்சார இயக்கமாகவும் இருந்தது. மலையாள இலக்கியத்தில் முற்போக்கு இயக்கத்தின் பகுதியாக மாறக் கம்யூனிசத்தால் முடிந்தது. சாதி சார்ந்த சுரண்டலையும் பொருளாதாரச் சுரண்டலையும் கேள்வி கேட்க அது அடித்தள மக்களுக்குப் பயிற்சியளித்தது. சாதியமைப்பு கேரளத்தில் தொடர்ந்தபோதும் அதற்குள்ளிருந்த அடிமை மரபுகள் முடிவடைந்தன.ஆனால் அதிகார நாற்காலிகளுடன் பழகியதோடு கம்யூனிசத்தின் இலட்சியத் தூய்மை காணாமற் போயிற்று. அதை உருவாக்க உதவிய முற்போக்குக் கேரளத்திலேயே அது ஒரு சனாதனப் பிரிவாக மாறியது. கிராமத் தொழிலாளிகளிடமிருந்தும் ஏழை விவசாயிகளிடமிருந்தும் கம்யூனிசத்தின் அக்கறை மாறி, சம்பளக்காரர்களான வெள்ளைக் காலர் ஊழியர்களிடம் மையங்கொண்டது.அவர்களிடமிருந்து மாதாமாதம் சந்தா திரட்டுவது எளிதாக இருந்தது என்பது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. ஊழியர்களால் கொடுக்க முடிகிற தொகையின் சிறு பங்கைக்கூட விவசாய நிலங்களில் உழைக்கும் கூலிப் பணியாளர்களால் கொடுக்க முடியாது. அது மட்டுமல்ல, இந்தக் கூலிப் பணியாளர்கள் அதிகார அமைப்பின் பகுதியாக இருக்கவில்லை. மாறாக, தலைமைச் செயலகத்திலும் ஆட்சியர் அலுவலகத்திலும் பிற அரசு அலுவலகங்களிலும். மின் வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிலும் பணிபுரியும் அலுவலர்களும் அதிகாரத்தின் - ஆட்சியமைப்பின் - பகுதியாக இருந்தார்கள். அவர்களைத் தன்னோடு சேர்த்து நிறுத்துவது அல்லது அவர்களோடு சேர்ந்து நிற்பது என்பதே கம்யூனிசத்தின் அதிகாரத் தந்திரமானது. அப்படியாக, ஊழல் பேர்வழிகளும் மக்கள் விரோதிகளுமான ஆயிரக்கணக்கான அலுவலர்களைக் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் காப்பாற்றத் தொடங்கின.இடதுசாரி எழுத்தாளர்கள், கோட்பாடு சார்ந்த இடது இலட்சியங்களையல்ல, கட்சியின் அதிகார 'லைனை'ப் பின்பற்றவும் ஆதரிக்கவும் வேண்டுமென்று கட்சி பிடிவாதம் பிடிக்கத் தொடங்கியபோது, படைப்பாற்றல் மிகுந்த எழுத்தாளர்கள் கட்சியைக் கைவிட்டார்கள். இதன் மிகச் சிறந்த உதாரணம்: ஓ.வி. விஜயன் (பின்னர், பெண்டுலம் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைவரை ஆடுவதுபோல, விநோதமான மென் இந்துத்துவச் சாய்வை விஜயன் வெளிப்படுத்தினார் என்பதை வாழ்க்கையின் கசப்பான நகைச்சுவைகளில் ஒன்றாகக் கருதினால் போதும்).கேரளத்தில் முதலாளித்துவம் மிகப் புராதனமாக இருந்த காலப் பகுதியில்தான் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. ஆனால், அந்தப் புரட்சி அங்கேயே முடிவடைந்தது. அதிகார நாற்காலியை மட்டுமே குறிவைத்த கட்சி, தொழிலாளர் அமைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்தது, வழி தவறச் செய்தது. கட்சி வளர்வதற்குப் 'போராட்டங்கள்' தேவையாக இருந்தன. ஆயிரக்கணக்கான உற்பத்திக்கூடங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்களைக் கட்சி தனது பகடைக் காய்களாகப் பயன்படுத்தியது. நம்ப முடியாதது எனத் தோன்றும் சில தளங்களைக் கட்சியின் தொழிலாளித் தந்திரங்கள் எட்டின. பார்வைக் கூலி ஓர் உதாரணம்.நீங்கள் வீடு மாறுவதாக வைத்துக்கொள்வோம். உங்களது வீட்டுச் சாமான்களை ஒரு வாகனத்திலேற்றிப் புதிய வீட்டிற்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறீர்கள். அவற்றை வண்டியிலிருந்து கீழேயிறக்கத் தொடங்கும்போது அந்தப் பகுதியிலுள்ள சுமைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கி வைப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்பதோ திடுக்கிடச் செய்வதும் எந்தச் சாதாரணச் சட்டத்துக்கும் உட்படாததுமான ஒரு கூலி. கொடுக்க இயலாது என்று சொல்கிறீர்கள். சரி, நீங்களே இறக்கிவைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். நீங்கள் இறக்கும்போது அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இறக்கி முடித்ததும் கேட்கிறார்கள்: இனி எங்கள் கூலியைக் கொடுங்கள். 'அதெப்படி?' நீங்கள் கேட்கிறீர்கள். 'எங்கள் வேலையை நீங்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்ததற்கான கூலியைத்தான் கேட்கிறோம்' என அவர்கள் சொல்லுகிறார்கள். நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். அவர்கள் பயமுறுத்துகிறார்கள். பிறகு உங்களைத் தாக்குகிறார்கள். இதுதான் பார்வைக் கூலி என்ற புரட்சிகரமான மலையாளிக் கம்யூனிசக் கண்டுபிடிப்பு.கேரளத்தின் தொழிற்கலாச்சாரத்தை இவ்வளவு அழுகிய நிலைக்குக் கம்யூனிசம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இளம் மலையாளிகளுக்குக் கேரளத்துக்குள்ளே வேலை வாய்ப்பது அரிதாயிற்று. அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணமானார்கள். இன்று ஒவ்வொரு மலையாளியும் தனது குழந்தையைத் தயார் செய்வது கேரளத்தில் வாழ்வதற்காக அல்ல; நாடு விட்டுச் செல்வதற்காக. மலையாளிகளின் மிகச் சமர்த்தான சந்ததிகள் பதினாறு பதினெட்டு வயதாவதற்குள் நல்ல தொழிற்கல்வி தேடியும் நல்ல எதிர்காலம் தேடியும் என்றென்றைக்குமாக நாட்டை விட்டுப் போகிறார்கள்.இந்த நிலைமைக்கு வழிகோலியது கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல. கம்யூனிஸ்ட் கட்சியை முன்னுதாரணமாகக் கொண்டு காங்கிரசும் மற்ற கட்சிகளும் தொழிலாளிகளைச் சுரண்டின. கேரளம் இன்று இரண்டேயிரண்டு புல் தும்புகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு புல் தும்பு, சுற்றுலா. மற்றது மனித வள ஏற்றுமதி. சுற்றுலா நிலைநிற்கச் சுற்றுச் சூழல் நிலைநிற்க வேண்டும். ஆனால் சுற்றுச் சூழல் மீதே சுற்றுலாவின் பெயரில் ஆக்கிரமிப்புகள் நடத்தப்படுகின்றன. மனித வள ஏற்றுமதி வெற்றிபெற வேண்டுமானால் தரமான மனித ஆற்றல் உருவாக வேண்டும். ஆனால் ஆசிரியர்களின் அரசியலாலும் மந்தப் புத்திக்காரர்களான கல்வியமைச்சர்கள், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோரின் மூடத்தனமான நடவடிக்கைகளாலும் பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அரசியல் புரட்டுகள் மூலமும் கல்வித் தரம் வெட்கக் கேடான நிலைக்குத் தாழ்ந்துவிட்டது.நான் இவற்றையெல்லாம் எழுத நேர்ந்தது அண்மையில் மலப்புறத்தில் நடந்த, மிக அதிகம் கொண்டாடப்பட்ட மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) மாநில மாநாட்டின் பின்னணியில்தான். வி.எஸ். அச்சுதானந்தன் வழிநடத்திய மரபுவாதிகளுக்கும் பிணராயி விஜயன் வழிநடத்திய முழுமையான மரபுவாதிகளல்லாதவர்கள் என்று அழைக்கப்படும் பிரிவினருக்குமிடையில் நடந்த போட்டியில் பிணராயி விஜயன் அணி வெற்றி பெற்றது. மலையாளிகளைப் பொறுத்தவரை சி.பி.எம்.இன் முகத் தோற்றம் என்ன என்பது முக்கியமான விஷயம். காரணம், ஐந்தாண்டு இடைவேளைக்குள் மலையாளிகள் சாகவேண்டுமா வாழவேண்டுமா துன்புறுத்தப்பட வேண்டுமா மகிழ்ச்சியடைய வேண்டுமா என்பதை அந்தக் கட்சிதான் தீர்மானிக்கிறது. உலகெங்கும் கம்யூனிசம் தகர்ந்து விழுந்துவிட்டாலும், மலையாளிகள் இன்றும் அதைச் சுமந்து நடக்கிறார்கள். அல்லது மலையாளிகளைச் சுமந்து நடக்க இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். மலையாளிகளின் வருங்காலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சிக்கல் இது. அதே சமயம் இங்கும் கம்யூனிசம் தகர்ந்துபோனதாகக் கொண்டால், அந்த இடைவெளியில் இந்துத்துவவாதி உட்பட எந்த அற்பஜீவி ஊர்ந்து வருமென்றும் சொல்ல முடியாது.திராவிட இயக்கத்துக்கும் தமிழர்களுக்குமான உறவு இப்படியானதுதானா என்று எனக்குத் தெரியாது. திராவிட இயக்கம் தமிழ் மறுமலர்ச்சியின் அடிக்கல்லாக இருந்ததென்று தெரியும். அதிகாரம் வாய்த்ததும் அது, கேரளத்தின் கம்யூனிசம்போல நசிந்ததென்று தெரியும். ஊழலுக்கும் அதிகாரிகளின் தீவினை மேலாண்மைக்கும் அது துணைபுரிந்ததென்றும் தெரியும். அதன் ஆதி இலட்சியங்களை ஒவ்வொன்றாகக் கைவிட்டதென்றும் தெரியும்.ஆனால் கேரளத்திலிருந்து பார்க்கும்போது, சரியோ தவறோ, எனக்கு ஒரு வித்தியாசம் தோன்றுகிறது. திராவிட இயக்கம் பிளவுபடவும் புரளவும் கவிழவும் வீழவும் செய்திருந்தாலும், அது தமிழ்நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அரசுகள் மாறியபோதும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்தன. தமிழகம் அதன் எல்லாக் குறைகளுடனும் குற்றங்களுடனும் கேரளத்தைவிட எத்தனையோ மடங்கு வேகத்தில் எதிர்காலத்தை நோக்கிச் செல்கிற சமூகமாக இருக்கிறது. அதனாலேயே இன்று நான் மலையாளி களை முன்னெச்சரிக்கை செய்கிறேன். ஜாக்கிரதையாக இருங்கள். இப்போதே உங்கள் வீட்டில் அரிசி வேக வேண்டுமானால் தமிழ்நாட்டிலிருந்து அரிசி லாரி வர வேண்டும். உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்பாட்டில் நிறுத்த நீங்கள் கற்றுக் கொள்ள வில்லையென்றால், விரைவிலேயே ஒரு நாளில் நாம் தமிழ் நாட்டின் மீதோ, கர்நாடகத்தின் மீதோ அப்பிய ஒட்டுண்ணிகளாக மாறுவோம். குறிப்புகள்:வி.எஸ். அச்சுதானந்தன்: கேரளச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.பிணராயி விஜயன்: மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் செயலாளர்.தமிழில்: சுகுமாரன்&lt;br /&gt;http://tamil.sify.com/kalachuvadu/april05/fullstory.php?id=13710543&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8996292360605018439-1672465795016487723?l=senthilnaathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senthilnaathan.blogspot.com/feeds/1672465795016487723/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8996292360605018439&amp;postID=1672465795016487723' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/1672465795016487723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8996292360605018439/posts/default/1672465795016487723'/><link rel='alternate' type='text/html' href='http://senthilnaathan.blogspot.com/2008/03/blog-post.html' title='கம்யூனிசமும் மலையாளிகளும் -ஒரு மலையாளியின் பார்வையில்'/><author><name>செந்திலான்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://3.bp.blogspot.com/-3G-zW5tDiGQ/Tb-xaOAR7sI/AAAAAAAABHc/5Wi8-wQhjtQ/s220/rose1.png'/></author><thr:total>0</thr:total></entry></feed>
