பெங்களூரு நாட்குறிப்புகள் ....!
இந்த நீண்ட மழைக்காலம் ஏமாற்றம் தருவதாக இருக்கிறது .
ஒற்றனைப் போல ரகசியமாக வந்து செல்கிறது மழை.
இதில் பகலெனப் படுவது
அலுவலகக் கணினிக்கான காலமாக இருக்கிறது
இரவெனப் படுவது வீட்டுக் கணினிக்கு உரியது
இங்கு தெருவானது ஒரு வாசலில் தொடங்கி
இன்னொரு வாசலிலேயே முடிந்து விடுகிறது.
இதில் வாழ்வெனப் படுவது சுழலும்
ஓர் வெற்றுக் கனவு..!
பெங்களூரு நாட்குறிப்புகள் ....!
| author: செந்திலான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)